இன்பத்தமிழ்
தமிழுக்கும் அமுதென்றுபேர்! – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! *
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்! *
தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! *
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
- பாரதிதாசன்
பாரதிதாசன் குறிப்பு
• பெயர் : பாரதிதாசன்
• இயற்பெயர் : சுப்புரத்தினம்
• பிறந்த ஊர் : புதுச்சேரி
• பெற்றோர் : கனகசபை – இலக்குமி அம்மையார்
• பணி : தமிழாசிரியர்
• காலம் : 29-04-1891 முதல் 21-04-1964 வரை
• சிறப்புப்பெயர் :
1.பாவேந்தர்
2.புரட்சிக்கவிஞர்
• இயற்றிய நூல்கள் :
1.குடும்ப விளக்கு
2.பாண்டியன் பரிசு
3.பிசிராந்தையார்
4.அழகின் சிரிப்பு
வினாக்கள்
1) "தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார் ?
Answer : பாரதிதாசன்
2) பாரதிதாசன் இயற்பெயர் ?
Answer : கனக சுப்புரத்தினம்
3) சுப்புரத்தினம் பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாக தம் பெயரை எவ்வாறு மாற்றிக் கொண்டார் ?
Answer : பாரதிதாசன்
4) புரட்சிக் கவி என அழைக்கப்படுபவர் யார் ?
Answer : பாரதிதாசன்
5) பாவேந்தர் என அழைக்கப்படுபவர் யார் ?
Answer : பாரதிதாசன்
உருவாக்கப்பட்ட ______ஆகும் ?
Answer : ஊர்
6) தமிழ் எங்கள் இளமைக்கு காரணமான பால் போன்றது. நல்ல புகழ் மிகுந்த புலவர்களுக்கு கூர்மையான _____ போன்ற கருவி ஆகும்?
Answer : வேல்
7) தமிழ் எங்கள் உயர்விற்கு எல்லையாகிய வானம் போன்றது. இன்பதமிழ் எங்கள் சோர்வை நீக்கி ஒளிரச் செய்யும் _______ போன்றது?
Answer : தேன்
8) தமிழ் எங்கள் அறிவுக்கு துணை கொடுக்கும் தோள் போன்றது. தமிழ்
எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதி மிக்க __________ ஆகும் ?
Answer : வாள்
9) தமிழ் எங்கள் இளமைக்கு காரணமான பால் போன்றது. நல்ல புகழ் மிகுந்த புலவர்களுக்கு கூர்மையான _____ போன்ற கருவி?
Answer : வேல்
10) தமிழ் எங்கள் உயர்விற்கு எல்லையாகிய வானம் போன்றது. இன்பதமிழ் எங்கள் சோர்வை நீக்கி ஒளிரச் செய்யும் _______ போன்றது?
Answer : தேன்
11) தமிழ் எங்கள் அறிவுக்கு துணை கொடுக்கும் தோள் போன்றது. தமிழ்
எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதி மிக்க __________ ஆகும் ?
Answer : வாள்
BOOK BACK வினாக்கள் & விடைகள்
12) ஏற்றத்தாழ்வற்ற ______ அமைய வேண்டும் ?
Answer : சமூகம்
13) நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு _______
ஆக இருக்கும் ?
Answer : அசதி
14) நிலவு + என்று என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல் ?
Answer : நிலவென்று
15) தமிழ் + எங்கள் என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல் ?
Answer : தமிழெங்கள்
16) அமுதென்று என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது ?
Answer : அமுது + என்று
17) செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது ?
Answer : செம்மை + பயிர்
18) சொல்-பொருள் தருக
1) நிருமித்த - உருவாக்கிய
2) சமூகம் - மக்கள் குழு
3) விளைவு - வளர்ச்சி
4) அசதி - சோர்வு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக