link rel='canonical' expr:href='data:blog.url'/> Tamil mind space : ஆறாம் வகுப்பு தமிழ் பெருஞ்சித்திரனார் பாடல்கள் "தமிழ்க்கும்மி" முக்கிய வினாக்கள்

புதன், 14 ஜூன், 2023

ஆறாம் வகுப்பு தமிழ் பெருஞ்சித்திரனார் பாடல்கள் "தமிழ்க்கும்மி" முக்கிய வினாக்கள்

      

ஆறாம் வகுப்பு தமிழ்        தமிழக்கும்மி முக்கிய                   வினாக்கள்


   சரியான விடையைத்       தேர்ந்தெடுத்து எழுதுக


1. தாய் மொழியில் படித்தால் ------ அடையலாம்

    அ) பன்மை  ஆ) மேன்மை

 இ) பொறுமை  ஈ) சிறுமை

2. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் ------ சுருங்கிவிட்டது

    அ) மேதினி  ஆ) நிலா 

 இ) வானம்  ஈ) காற்று

3. ’செந்தமிழ்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_______

    அ) செந் + தமிழ்  ஆ) செம் + தமிழ் 

    இ) சென்மை + தமிழ் 

    ஈ) செம்மை + தமிழ்

4. பொய்யகற்றும்’ என்னும் சொல்லை ப் பிரித்து எழுதக் கிடைப்பது_________

    அ) பொய் + அகற்றும்

   ஆ) பொய் + கற்றும்

    இ) பொய்ய + கற்றும் 

 ஈ) பொய் + யகற்றும்

5. பாட்டு+ இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் --------

    அ) பாட்டிருக்கும்  ஆ) பாட்டுருக்கும்

   இ) பாடிருக்கும்  ஈ) பாடியிருக்கும்

6. எட்டு + திசை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------

    அ) எட்டுத்திசை  ஆ) எட்டிதிசை 

  இ) எட்டுதிசை  ஈ) எட்டிஇசை

7. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?

     அ) துரைமாணிக்கம் ஆ) சாமிதுரை

     இ) இராசமாணிக்கம் ஈ) துரைசாமி

8. “மாணிக்கம்” என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்

     அ) பாரதியார் ஆ )பாரதிதாசன்

     இ) பெருஞ்சித்திரனார் ஈ) கவிமணி

9. “பாவலரேறு” என்று சிறப்புப்பெயரால் அழைக்கப்படும் கவிஞர்

     அ) பாரதியார் ஆ)பாரதிதாசன்

     இ) பெருஞ்சித்திரனார் ஈ) கவிமணி

10. நம் பாடப்பகுதியில் இடம்பெறும் தமிழ்க்கும்மி கவிதைப்பேழை பாடலைப் பாடியவர்

     அ) பாரதியார்

    ஆ) கண்ணதாசன்

     இ) பெருஞ்சித்திரனார் 

      ஈ) கவிமணி

11. நம் பாடப்பகுதியில் இடம்பெறும் தமிழ்க்கும்மி கவிதைப்பேழை பாடல் இடம்பெறும் நூல்

      அ) கனிச்சாறு 

     ஆ) கொய்யாக்கனி

      இ) பாவியக்கொத்து

      ஈ) நூறாசிரியம்

12. “தென்மொழி. தமிழ்ச்சிட்டு. தமிழ் நிலம்” ஆகிய இதழ்களை நடத்தியவர்

      அ) கல்யாண சுந்தரனார்

      ஆ) கண்ணதாசன்

      இ) பெருஞ்சித்திரனார் 

       ஈ) சுரதா

13. திசைகள் ________ செந்தமிழின் புகழ் பரவ வேண்டும்.

     அ) இரண்டிலும் ஆ) எட்டிலும்

     இ) நான்கிலும் ஈ) பத்த்திலும்

14. ________ சிறந்து வாழ்வதற்கான வழிகாட்டு முறைகள் காெண்டது தமிழ்.

      அ) உலகம் ஆ) ஊர்

      இ) தெரு‌ ஈ) நாடு


 கோடிட்ட இடங்களை நிரப்புக


1. தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாலவர் ________

விடை : பெருஞ்சித்திரனார்

2. எட்டுதிசையிலும் ________புகழ் எட்டிடவே கும்மி கொட்டுங்கடி- விடுபட்ட சொல்லை நிரப்புக

விடை : செந்தமிழின்

3. ________ பல நூறு ஆண்டுகளைக் கணடது

விடை : தமிழ்மொழி

4. பொய்யாமை அகற்றும் மொழி ________

விடை : தமிழ்மொழி

5. உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளையும் காட்டும் மொழி ________

விடை : தமிழ்மொழி


பொருள் கூறுக


1. ஆழி - கடல்

2. மேதினி - உலகம்

3. மேன்மை - உயர்வு

4. ஊழி - நீண்டதொரு காலப்பகுதி


கருத்துகள் இல்லை:

ஆயுளை அதிகரிக்கும் மூச்சுப் பயிற்சி pranayama, Breathing 🫁 Exercise 🧘‍♂️🧘‍♀️🧘😊

🧘‍♂️ மூச்சுப் பயிற்சி: இயற்கையான முறையில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழி 📌 அறிமுகம் இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் மனஅழுத்தம், தூக்கமின்ம...