link rel='canonical' expr:href='data:blog.url'/> Tamil mind space : Group 4 tamil question தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் பாரதியார்

வெள்ளி, 3 மே, 2024

Group 4 tamil question தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் பாரதியார்

தமிழ் அறிஞர்களும் தமிழ்த்             தொண்டும் - 1

பாரதியார் பற்றிய கேள்விகள் 



 1. பாரதியார் அதிகமாக கையாண்ட பாவகை எது?

Ans : சிந்து வகை

2. காற்றே வா, மகரந்தத் தூளைச் சுமந்து கொண்டு, மனத்தை மயலுறுத்து கின்ற இனிய வாசனையுடன் வா; இலைகளின் மீதும், நீரலைகளின் மீதும் உராய்ந்து, மிகுந்தப் ராண - ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு." - என்ற பாடலை பாடியவர் யார்?

Ans : பாரதியார்

3. "நாடும் மொழியும் நமதிரு கண்கள்" என்று கூறியவர் யார்?

Ans : பாரதியார்

4. நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா" மற்றும் "சிந்துக்குத் தந்தை" என்றெல்லாம் பாராட்டப்பட்டவர் யார்?

Ans : பாரதி

5. "பாட்டுக்கொரு புலவன்" எனப் பாராட்டப்பட்டவர் யார்?

Ans : பாரதி

6. "காற்று" என்னும் தலைப்பிலான வசன கவிதையை எழுதியவர் யார்?

Ans : பாரதியார்

7. "இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்" - என்றவர் யார்?

Ans : பாரதி

8. உரைநடையும், கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் வசன கவிதை வடிவம் தமிழில் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?

Ans : பாரதியார்

9. "கத்துங் குயிலோசை- சற்றே வந்து காதிற் பட வேணும்" -என்று பாடியவர் யார்?

Ans : பாரதியார்

10. "வள்ளுவன் தன்னை உலகினுக்கே -தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி யாரம் படைத்த தமிழ்நாடு" -என்ற பாடலை எழுதியவர் யார்?

Ans : சுப்ரமணி பாரதி

11. "கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்" என்று பெருமைப்படுபவர் யார்?

Ans : பாரதியார்

12. கவிதையினை இயன்றவரை பேசுவது போல் எழுதுவதுதான் உத்தமம் என்றும் அதுவே மானுடத்துக்கு எழுத்தாளர்கள் செய்யும் கடமை என்று கூறியவர்

Ans : பாரதி

13. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றவர்

Ans : பாரதி

14. பாரதி தமிழாசிரியராகப் பணிபுரிந்த இடம் எது?

Ans : மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி 

15. பாரதியார் உதவி ஆசிரியராக பணியாற்றிய இதழ் எது?

Ans : சுதேசமித்திரன்

16. பாரதி கருத்துப்படங்களை மட்டுமே கொண்டு நடத்த விரும்பிய இதழ் எது?

Ans : சித்திராவளி

17. பாரதியார் பெண்களுக்காக குறள் வெண்பா எழுதிய இதழ் எது?

Ans : சக்கரவர்த்தினி

18. பாரதி சிவப்பு வண்ணத்தாளில் வெளியிட்ட இதழ் எது?

Ans : இந்தியா

19. சுவைபுதிது, பொருள்புதிது, வளம்புதிது சொற்புதிது சோதிமிக்க நவகவிதை - என்று பாடியவர்?

Ans : பாரதி

20. ஷெல்லியின் கவிதைகளால் கவரப்பட்டு, தமது பெயரை ஷெல்லிதாசன் என மாற்றிக் கொண்டவர்?

Ans : பாரதியார்

21. மகாகவி பாரதியார் 1907-ல் தொடங்கிய இதழ்கள் எவை?

Ans : இந்தியா,  பாலபாரதம்


WHATSAPP GROUP 


TNPSC TAMIL WHATSAPP GROUP - Click here to join WhatsApp group



கருத்துகள் இல்லை:

ஆயுளை அதிகரிக்கும் மூச்சுப் பயிற்சி pranayama, Breathing 🫁 Exercise 🧘‍♂️🧘‍♀️🧘😊

🧘‍♂️ மூச்சுப் பயிற்சி: இயற்கையான முறையில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழி 📌 அறிமுகம் இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் மனஅழுத்தம், தூக்கமின்ம...