link rel='canonical' expr:href='data:blog.url'/> Tamil mind space

வியாழன், 11 மே, 2023

குற்றியலுகரமும் அதன் வகைகளும்

 



குற்றியலுகரம் 

குறுகிய ஓசைகளை உடைய உகரம் குற்றியலுகரம் ஆகும்.

அதாவது உகரமானது தனது 1 மாத்திரை அளவில் இருந்து 1/2 மாத்திரை அளவாக குறைந்து ஒலிப்பதே ஆகும்.

குற்றியலுகர எழுத்துக்கள் 

கு,சு,டு,து,பு,று 


குற்றியலுகரத்தின் வகைகள் 

குற்றியலுகரம் தனக்கு முன் உள்ள எழுத்தைக் கொண்டு 6 வகையாகப் பிரிக்கலாம். அவையாவன,

1.நெடில்தொடர்க் குற்றியலுகரம்
2. ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
3. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
4. வன்தொடர்க் குற்றியலுகரம்
5. மென்தொடர்க் குற்றியலுகரம்
6. இடைத்தொடர்க் குற்றியலுகரம்
போன்றவை ஆகும்.

1.நெடில்தொடர்க் குற்றியலுகரம் 
குற்றியலுகர எழுத்திற்கு முன் உள்ள எழுத்தானது நெடிலாக இருந்தால் அது நெடில்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

இது பொதுவாக இரண்டு எழுத்துக்களில் மட்டுமே வரும்.

எ.கா
         மாடு

 மாடு என்னும் சொல்லில் மா என்பது நெடில் எழுத்து .
டு என்பது குற்றியலுகர எழுத்து.

எனவே டு என்னும் குற்றியலுகர எழுத்திற்கு முன் மா என்னும் நெடில் எழுத்து வந்துள்ளதால் இது நெடல்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.

2.ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் 
ஆய்த எழுத்தை தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.

அதாவது குற்றியலுகர எழுத்திற்கு முன் ஆய்த எழுத்து () வருவது ஆகும்.

எ.கா
         அஃது, இஃது, எஃகு, போன்றவை ஆகும்.

அஃது என்னும் சொல்லில் உள்ள என்பது ஆய்த எழுத்து.
து என்பது குற்றியலுகர எழுத்தாகும்.

எனவே து என்னும் குற்றியலுகர எழுத்திற்கு முன் என்னும் ஆய்த எழுத்து வந்துள்ளதால் இது ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.

3.உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் 
உயிரெழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

எ.கா
          வரலாறு, அரசு, ஒன்பது, கயிறு
போன்றவை ஆகும்.

வரலாறு என்னும் சொல்லில் று என்பது குற்றியலுகர எழுத்தாகும். அதற்கு முன் உள்ள லா என்னும் உயிர்மெய் எழுத்தை பிரித்தால் ல்+அ எனப் பிரியும் இதில் உள்ள என்னும் எழுத்தானது உயர் எழுத்தாகும். எனவே இது உயிர்த்தொடர்க்
குற்றியலுகரம் ஆகும்.

4.வன்தொடர்க் குற்றியலுகரம்
வல்லின மெய்யை அடுத்து வரும் குற்றியலுகரம் வன்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

எ.கா
         பாக்கு, பேச்சு, பாட்டு, பற்று, உப்பு
போன்றவை ஆகும்.

பாக்கு என்னும் சொல்லில் கடைசியில் உள்ள கு என்பது குற்றியலுகர எழுத்தாகும் அதற்கு முன் உள்ள க் என்னும் எழுத்தானது வல்லின மெய் என்பதால் இது வன்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.

5.மென்தொடர்க் குற்றியலுகரம் 
மெல்லின மெய்யை அடுத்து வரும் குற்றியலுகரம் மென்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

எ.கா
         பண்பு, பந்து , அம்பு, கன்று, பஞ்சு, பங்கு போன்றவை ஆகும்.

பண்பு என்ற சொல்லின் கடைசியில் உள்ள பு என்னும் எழுத்து குற்றியலுகர எழுத்தாகும் அதற்கு முன் உள்ள ண் என்னும் எழுத்தானது மெல்லின மெய் ஆகும் எனவே இது மென்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.

6.இடைத்தொடர்க் குற்றியலுகரம் 
 இடையின மெய்யைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் இடைத்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

எ.கா
         எய்து, மார்பு, சால்பு, மூழ்கு போன்றவை ஆகும்.

எய்து என்னும் சொல்லின் கடைசியில் உள்ள து என்னும் குற்றியலுகர எழுத்திற்கு முன் ய் என்ற இடையின மெய் வந்துள்ளதால் இது இடைத்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.






வியாழன், 30 மார்ச், 2023

மின்மினிப் பூச்சி ஏன் ஒளிர்கிறது?

 நம்மில் பலருக்கும் இந்த சந்தேகம் இருக்கும். எப்படி மின்மினிப் பூச்சி ஒளிர்கிறது என்று🤔எனக்கும் இதே சந்தேகம் பல வருடம் உள்ளது. 

ஓர் இரவில் தீடீரென மின்மினிப் பூச்சியைப் பார்த்து வியந்தேன்😃 . மின் விளக்குகள் அனைத்தும் அனைந்திருக்க பச்சை நிறத்தில் பிரகாசமான ஒளி நின்று நின்று ஒளிர்ந்தது. 

எப்படி இந்தப் பூச்சி ஒளிர்கிறது என்று தெரிந்துக்கொள்ள மிகவும் ஆவலுடன் இருந்தேன். இணையத்தில் சென்று படித்ததில் மிகவும் வியப்புக்குள்ளானேன்.

இப்போது எதனால் ஒளிர்கிறது என்று தெரிந்துக்கொள்வோம்...

மின்மினிப் பூச்சியும் ஒரு சாதாரண பூச்சி(பூச்சிகள்) வகையைச் சார்ந்த ஓர் உயிரினம் தான்.  இதன் வயிற்றில் தான் ஒளி உமிழும் உறுப்பு அமைந்துள்ளது. இதன் வயிற்றில் நடக்கும் வேதிவினையே ( chemical reactions) ஒளி உமிழக் காரணமாகிறது. இதற்கு உயிர் ஒளி உமிழும் தன்மை என்று பெயர்.

இப்பூச்சிகளின் உடலில் லூசிஃபெரேஸ் என்னும் ஒளி உமிழ்தலைத் தூண்டும் நொதி ஒன்று சுரக்கிறது. இந்நொதியிலிருந்து உருவாகும் லூசிஃபெரின் என்னும் கரிமப்பொருள் கால்சியம், அடினோசைன் டிரை பாஸ்பேட், ஆக்ஸிஜனின் ஆகியவற்றுடன் வினைபுரிந்து ஒளி உண்டாகிறது.

உயிரினங்கள் உண்ணும் உணவானது அடினோசைன் டிரை பாஸ்பேட் என்னும் வேதிச் சேர்மத்தின் வடிவில்உடலில் சக்தியாக சேமித்து வைக்கப்படுகிறது.

மின்மினிப் பூச்சிகள் ஒளி உருவாக்க தேவையான வேதிப்பொருட்களுடன் ஆக்டிரியாச் சேர்த்து வேதிவினையின் தொடக்கம் மற்றும் முடிவைக் கட்டுப்படுத்துகிறது.


அதாவது ஆக்ஸிஜன் இருக்கும்போது ஒளி வெளிப்படும். ஆக்ஸிஜன் இல்லாத போது ஒளி வெளியிடப்படாது.


மின்மினிப் பூச்சிகளுக்கு நுரையீரல் கிடையாது. அவை உடலின் வெளிப்பகுதியிலிருந்து உட்புறச் செல்களுக்கு டிராக்கியோல்கள் எனப்படும் தொடர் குழாய்கள் மூலம் ஆக்ஸிஜனைப் பெறுகின்றன.


பொதுவாக விளக்குகள் எரியும் போது ஆற்றலானது ஒளியாகவும், வெப்பமாகவும் வெளிப்படும். அதாவது ஒரு பல்ப் எரியும் போது 10 சதவீதம் ஒளி ஆற்றலையும், 90 சதவீதம் வெப்ப ஆற்றலையும் வெளியிடுகிறது.


ஆனால் மின்மினிப் பூச்சிகள் உடலில் நடைபெறும் வேதியாற்றல் முழுவதும் (100 சதவீதம்) ஒளியாற்றலாக மாற்றப்படுகிறது. வெப்ப சக்தி வெளியிடப்படுவதில்லை. ஆதலால் மின்மினிப் பூச்சிகள் குளிர்ந்த விளக்குகள் என்று அழைக்கப்படுகின்றன.


இப்பூச்சிகளின் பல்வேறு இனங்கள் வெவ்வேறு கால அளவுகளில் பல்வேறு வண்ணங்களை வெளிப்படுத்துகின்றன.

திருக்குறளில் உளவியல் சிந்தனைகள்

  thirukkural-ulaviyal-sinthanaigal-tamil.jpg திருக்குறளில் உளவியல் சிந்தனைகள் – மனித மனதை வழிநடத்தும் திருவள்ளுவரின் அறிவியல் அறிமுகம் உலக ...