link rel='canonical' expr:href='data:blog.url'/> Tamil mind space : மே 2024

வெள்ளி, 3 மே, 2024

Group 4 tamil important questions தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் பாரதிதாசன்

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் 

பாரதிதாசன் பற்றிய செய்திகள்



 1. "தமிழுக்கும் அமுதென்றுபேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் " என்று பாடியவர் யார்?

Ans : பாரதிதாசன்

2. பாரதிதாசனின் இயற் பெயர் என்ன?

Ans : கனக சுப்புரத்தினம்

3. புரட்சிக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?

Ans : பாரதிதாசன்

4. சுப்புரத்தினம் யாருடைய கவிதைகள் மீது கொண்ட பற்றினால் தம் பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்?

Ans: பாரதியார்

5. பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் ?

Ans : நிலவு மணம் 

6. பிசிராந்தையார் என்னும் நாடக நூலை எழுதியவர் யார்?

Ans : புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

7. பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறும் பறவை?

Ans : மயில்

8. "உலகம் உண்ண உண். உடுத்த உடுப்பாய்" என்று பாடியவர் யார்?

Ans : பாவேந்தர் பாரதிதாசன்

9. "கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம் அந்நி லத்தில் புல் விளைந் திடலாம் நல்ல புதல்வர்கள் விளைதல் இல்லை" என்று பாடியவர்?

Ans : பாவேந்தர் பாரதிதாசன்

10. குடும்ப விளக்கு _________பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது?

Ans : 5

11. சாகித்ய அகாதமி விருது பெற்ற பாரதிதாசனின் நாடக நூல்?

Ans : பிசிராந்தையார்

12. 'பெண்எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்படல் என்பது சரிப்படாது" என்று பாடியவர்?

Ans : பாரதிதாசன்

13. "அத்தனை பேரும் மெய்யாய் அப்படித் தானே மானே? பித்தேறி மேல்கீழ் என்று மக்கள்தாம் பேசல் என்னே!" என்று பாடியவர்?

Ans : புரட்சிக் கவிஞர்

14. "இட்டதோர் தாமரைப்பூ இதழ்விரித் திருத்தல் போலே வட்டமாய்ப் புறாக்கள்கூடி இரையுண்ணும்....." - என்ற கவிதையை எழுதியவர் யார்?

Ans : பாரதிதாசன்

15. "அறைக்குள் யாழிசை ஏதென்று சென்று எட்டிப் பார்த்தேன்; பேத்தி, நெட்டுருப் பண்ணினாள் நீதிநூல் திரட்டையே.-  என்ற கவிதையை எழுதியவர் யார்?

Ans : பாரதிதாசன்

16. "சிற்றூரும் வரப்பெடுத்த வயலும் ஆறு தேக்கியநல் வாய்க்காலும் வகைப் படுத்தி நெற்சேர உழுதுழுது பயன்வி ளைக்கும் நிறைஉழைப்புத் தோள்களெலாம் எவரின்தோள்கள்?" என்று பாடியவர் யார்?

Ans : பாரதிதாசன்

17. வடமொழியில் எழுதப்பட்ட பில்கணீயம் என்னும் நூலைத் தழுவி தமிழில் பாரதிதாசனால் 1937 ல் இயற்றப்பட்டது எது?

Ans : புரட்சிக் கவி

18. பிரெஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் சட்டத்தைத் தமிழில் தந்தவர் யார்?

Ans : பாரதிதாசன்

19. பாரதிதாசன் நடத்திய இதழ்?

Ans : குயில்

20. பாரதிதாசன் உரை எழுதிய நூல் எது?

Ans : திருக்குறள்

21. தமிழக அரசு பாரதிதாசன் பெயரால் ஒரு பல்கலைக்கழகத்தை எங்கு நிறுவியுள்ளது?

Ans : திருச்சிராப்பள்ளி

22. "பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில் மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே" என்று முழங்கியவர் யார்?

Ans : பாரதிதாசன்

23. "நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்" என்றவர் யார்?

Ans : பாரதிதாசன்

24. "விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை மானுட சமுத்திரம் நானென்று கூவு புவியை நடத்து; பொதுவில் நடத்து!" என்று பாடியவர் யார்?

Ans : பாரதிதாசன்

25. "வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே" என்று திருவள்ளுவரைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

Ans : பாரதிதாசன்

26. சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி இந்தா வென்றே இயற்கை அன்னை வானில் எழில் வாழ்வைச் சித்தரித்த வண்ணந் தானோ?" என்ற பாடலை இயற்றியவர் யார்?

Ans : புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

27. "ஓங்கிடச் செய்வ தொன்றே உயிர்ப்பணியாகக் கொண்டோன் வீங்கிட மாட்டான் கல்வி விளம்பரம் விழைதல் இல்லான்" - என்று மயிலை சீனி. வேங்கடசாமி குறித்து பாடியவர் யார்?

Ans : பாவேந்தர்

28. 'பாரதியின் கவிதாமண்டலத்தைச் சேர்ந்தவர்' என்று பாரதியாரால் முன்மொழியப்பட்டவர்

Ans : பாரதிதாசன்

29. பாரதிதாசன் தன்மொழி, தன்னாடு, தன்மக்கள் எனப் பாடியதால் எந்த கவிஞரோடு ஒப்பிடப்படுகின்றார்?

Ans : பாரதிதாசன்

30. 1946 ஆம் ஆண்டு தமிழில் முதன்முதலாக --————- என்னும் தலைப்பில் உரையாடல் இல்லாத மௌன நாடகம் பாரதிதாசனால் எழுதப்பட்டது.

Ans : அமைதி 

WhatsApp group - Click here to join WhatsApp group


Group 4 tamil question தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் பாரதியார்

தமிழ் அறிஞர்களும் தமிழ்த்             தொண்டும் - 1

பாரதியார் பற்றிய கேள்விகள் 



 1. பாரதியார் அதிகமாக கையாண்ட பாவகை எது?

Ans : சிந்து வகை

2. காற்றே வா, மகரந்தத் தூளைச் சுமந்து கொண்டு, மனத்தை மயலுறுத்து கின்ற இனிய வாசனையுடன் வா; இலைகளின் மீதும், நீரலைகளின் மீதும் உராய்ந்து, மிகுந்தப் ராண - ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு." - என்ற பாடலை பாடியவர் யார்?

Ans : பாரதியார்

3. "நாடும் மொழியும் நமதிரு கண்கள்" என்று கூறியவர் யார்?

Ans : பாரதியார்

4. நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா" மற்றும் "சிந்துக்குத் தந்தை" என்றெல்லாம் பாராட்டப்பட்டவர் யார்?

Ans : பாரதி

5. "பாட்டுக்கொரு புலவன்" எனப் பாராட்டப்பட்டவர் யார்?

Ans : பாரதி

6. "காற்று" என்னும் தலைப்பிலான வசன கவிதையை எழுதியவர் யார்?

Ans : பாரதியார்

7. "இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்" - என்றவர் யார்?

Ans : பாரதி

8. உரைநடையும், கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் வசன கவிதை வடிவம் தமிழில் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?

Ans : பாரதியார்

9. "கத்துங் குயிலோசை- சற்றே வந்து காதிற் பட வேணும்" -என்று பாடியவர் யார்?

Ans : பாரதியார்

10. "வள்ளுவன் தன்னை உலகினுக்கே -தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி யாரம் படைத்த தமிழ்நாடு" -என்ற பாடலை எழுதியவர் யார்?

Ans : சுப்ரமணி பாரதி

11. "கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்" என்று பெருமைப்படுபவர் யார்?

Ans : பாரதியார்

12. கவிதையினை இயன்றவரை பேசுவது போல் எழுதுவதுதான் உத்தமம் என்றும் அதுவே மானுடத்துக்கு எழுத்தாளர்கள் செய்யும் கடமை என்று கூறியவர்

Ans : பாரதி

13. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றவர்

Ans : பாரதி

14. பாரதி தமிழாசிரியராகப் பணிபுரிந்த இடம் எது?

Ans : மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி 

15. பாரதியார் உதவி ஆசிரியராக பணியாற்றிய இதழ் எது?

Ans : சுதேசமித்திரன்

16. பாரதி கருத்துப்படங்களை மட்டுமே கொண்டு நடத்த விரும்பிய இதழ் எது?

Ans : சித்திராவளி

17. பாரதியார் பெண்களுக்காக குறள் வெண்பா எழுதிய இதழ் எது?

Ans : சக்கரவர்த்தினி

18. பாரதி சிவப்பு வண்ணத்தாளில் வெளியிட்ட இதழ் எது?

Ans : இந்தியா

19. சுவைபுதிது, பொருள்புதிது, வளம்புதிது சொற்புதிது சோதிமிக்க நவகவிதை - என்று பாடியவர்?

Ans : பாரதி

20. ஷெல்லியின் கவிதைகளால் கவரப்பட்டு, தமது பெயரை ஷெல்லிதாசன் என மாற்றிக் கொண்டவர்?

Ans : பாரதியார்

21. மகாகவி பாரதியார் 1907-ல் தொடங்கிய இதழ்கள் எவை?

Ans : இந்தியா,  பாலபாரதம்


WHATSAPP GROUP 


TNPSC TAMIL WHATSAPP GROUP - Click here to join WhatsApp group



வியாழன், 2 மே, 2024

Group 4 tamil question தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் பாரதியார்

 தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் - 1

பாரதியார் பற்றிய கேள்விகள் 




1. "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி       போல் இனிதாவது எங்கும் காணோம்"       என்று தமிழ் மொழியின் இனிமையை       வியந்து பாடியவர் யார்?

Ans : பாரதியார்

2. "என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்" என்று தமிழ்த்தாயின் தொன்மையைப் பறைசாற்றியவர் யார்?

Ans : பாரதியார்

3. தமிழ் மொழி போல் இனிதாவது எங்கு காணோம் என்று கூறியவர் யார்?

Ans : பாரதியார் 

4. கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதில் படவேணும் என்றன் சித்தம் மகிழ்ந்திடவே நன்றாய் இளம்தென்றல் வரவேணும் என்று பாடியவர் யார்?

Ans : பாரதியார்

5. பாரதியாரின் இயற்பெயர் என்ன?

Ans : சுப்ரமணியன் 

6. காக்கை குருவி எங்கள் ஜாதி என்று கூறியவர் யார்?

Ans : பாரதியார்

7. புதிய ஆத்திச்சூடியை இயற்றியவர் யார்?

Ans : பாரதியார்

8. “வானை அளப்போம் கடல் மீனை யளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம் சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்" என்ற பாடலைப் பாடியவர் யார்?

Ans : பாரதியார்

9. "வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம் அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் என்று பாடியவர் யார்?

Ans : பாரதியார்

10. தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இச்செகத்தினை அளித்திடும் என்றவர் யார்?

Ans : பாரதியார்

11. நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை சொல்வாரடீ! - கிளியே என்று பாடியவர் யார்?

Ans : பாரதியார்

12. "வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்" என்று பாடியவர் யார்?

 Ans : பாரதியார் 

13. இந்தியா என்ற இதழில் முதன்முதலில் கருத்துப்படங்களை அறிமுகப்படுத்தியவர் யார்?

Ans : பாரதியார்

14. கருத்துப் படங்களை தமிழில் அறிமுகப் படுத்தியவர் யார்?

Ans : பாரதியார்

15. பாரதியார் பிறந்த ஊர் எது?

Ans : எட்டயபுரம்

16. வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே! என்ற பாடல் வரிகளை இயற்றியவர் யார்?

Ans: பாரதியார்

17. இந்தியா மற்றும் விஜயா முதலிய இதழை நடத்தி விடுதலைக்கு வித்திட்டவர் யார்?

Ans : பாரதியார்

18. "மனம் பாட வந்த மறவன்" என்று பாரதிதாசனால் புகழ்பெற்றவர் யார்?

 Ans : பாரதியார் 

19. "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்" என்று பாடியவர்

Ans : பாரதியார்

20. பாரதியார் தன்னுடைய எந்த வயதில் "பாராதி" என்னும் பெயர் பெற்றார்?

Ans : 11 வயதில்


WHATSAPP GROUP 

TNPSC TAMIL WHATSAPP GROUP - Click here to join WhatsApp group




புதன், 1 மே, 2024

UGC - NET JUN 2024 Notification



 பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் தேசிய தகுதித் தேர்வுக்கான NET JUN 2024 அறிவிப்பு வெளியானது ...

NET என்று அழைக்கப்படும் இந்த தேர்வானது இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலும் உதவிப் பேராசிரியராக பணியாற்றுவதற்கு தகுதித் தேர்வாக விளங்குகிறது ...

NET - NATIONAL ELIGIBILITY TEST 

இதுவரை நெட் தேர்வானது 

1. ELIGIBLE FOR ASSISTANT PROFESSORE 2.LIGIBLE FOR JRF                                          என இரண்டு வகைகளில் தேர்வு முடிவானது வெளியானது. 

ஆனால் தற்போது  ELIGIBLE FOR PhD என்ற ஒன்றும் வந்துள்ளது. இதன் மூலம் PhD படிப்பதற்கு எந்த பல்கலைக்கழகமாக இருந்தாலும் அதற்கென தனி நுழைவுத் தேர்வு தேவை இல்லை , இதில் தேர்ச்சி அடைந்தாலே முனைவர் பட்ட படிப்பில் சேரலாம்


ELIGIBILITY FOR NET EXAM 

முதுகலை துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்...

குறிப்பாக 55% மதிப்பெண்ணில் தேர்ச்சி அடைந்தவர்களால்  மட்டுமே இத்தேர்விற்கு விண்ணப்பிக்க இயலும்...

Last Date 

Starting date - 20 April 2024

Ending date  - 10 May ( upto 11.50 pm)


தேர்வு கட்டணம் 

General/ Unreserved -      Rs. 1150/-

General-EWS/OBC-NCL -  Rs. 600/-

SC/ST/PwDR -                      Rs. 325/


அதிகாரப் பூர்வ அறிவிப்பு





HOW TO APPLY NET

தேர்விற்கு விண்ணப்பிப்பது எப்படி

1. UGC யின் அதிகாரப் பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. UGC - NTA என்ற இணையத்தை சொடுக்கி NET தேர்விற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பை படிக்கவும்

3. ஆன்லைனில் விண்ணப்பிக்க NEW REGISTRATION என்பதை கிளிக் செய்து விண்ணப்பிக்க தொடங்க வேண்டும்

4. தேர்விற்கு விண்ணப்பிக்க 

Aadhar no 

Phone number 

Voter ID number 

E-mail I'd

PG marks - obtained marks - maximum marks

University

DOB

Father & mother name

Community

Annual income

And apply for AP, JRF, PhD

என அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்

Upload documents 

Photo 

signature 

5. அதிகாரப் பூர்வ இணையதளத்திற்கு https://ugcnet.nta.ac.in கிளிக் செய்யவும்...

6. விண்ணப்பிக்க https://ugcnet.ntaonline.in/frontend/web/site/login இவற்றை கிளிக் செய்யவும்...

ஆயுளை அதிகரிக்கும் மூச்சுப் பயிற்சி pranayama, Breathing 🫁 Exercise 🧘‍♂️🧘‍♀️🧘😊

🧘‍♂️ மூச்சுப் பயிற்சி: இயற்கையான முறையில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழி 📌 அறிமுகம் இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் மனஅழுத்தம், தூக்கமின்ம...