Government and Private Employment News, Tamil Subject Tips, General Knowledge, Tips for Competitive Exams, Grammar, Literature, business ideas, motivational story, etc are posted on this blog.
வெள்ளி, 7 ஜூலை, 2023
விமான வேலைவாய்ப்பு 2023
வெள்ளி, 16 ஜூன், 2023
NET Hall ticket 2023 வெளியீடு
தேர்வு அனுமதிச் சீட்டு வெளியானது
National Eligibility Test) தேசிய தகுதித் தேர்வு இந்தியாவில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதி மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர்கள் உதவித் தொகை (JRF - Junior Research Fellowship) பெறுவதற்கான தகுதியினையும் நிர்மாணிக்கப்பதற்காகா UGC - NTA -வால்தேர்வு நடத்தப்படுகிறது...
இந்நிலையில் ஜீன் 2023 ஆம் ஆண்டிற்கான தேசிய தகுதி தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியானது.
இதனைத் தொடர்ந்து விண்ணப்பித்த தேர்வர்கள் தங்கள் அனுமதி சீட்டினை பதிவிறக்கி தேர்வு எழுதும் இடத்தை அறிந்துக்கொள்ள யுஜிசி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
எப்படி பதிவிறக்குவது
முக்கிய இணைப்புகள்
புதன், 14 ஜூன், 2023
ஆறாம் வகுப்பு தமிழ் பெருஞ்சித்திரனார் பாடல்கள் "தமிழ்க்கும்மி" முக்கிய வினாக்கள்
ஆறாம் வகுப்பு தமிழ் தமிழக்கும்மி முக்கிய வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. தாய் மொழியில் படித்தால் ------ அடையலாம்
அ) பன்மை ஆ) மேன்மை
இ) பொறுமை ஈ) சிறுமை
2. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் ------ சுருங்கிவிட்டது
அ) மேதினி ஆ) நிலா
இ) வானம் ஈ) காற்று
3. ’செந்தமிழ்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_______
அ) செந் + தமிழ் ஆ) செம் + தமிழ்
இ) சென்மை + தமிழ்
ஈ) செம்மை + தமிழ்
4. பொய்யகற்றும்’ என்னும் சொல்லை ப் பிரித்து எழுதக் கிடைப்பது_________
அ) பொய் + அகற்றும்
ஆ) பொய் + கற்றும்
இ) பொய்ய + கற்றும்
ஈ) பொய் + யகற்றும்
5. பாட்டு+ இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் --------
அ) பாட்டிருக்கும் ஆ) பாட்டுருக்கும்
இ) பாடிருக்கும் ஈ) பாடியிருக்கும்
6. எட்டு + திசை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------
அ) எட்டுத்திசை ஆ) எட்டிதிசை
இ) எட்டுதிசை ஈ) எட்டிஇசை
7. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?
அ) துரைமாணிக்கம் ஆ) சாமிதுரை
இ) இராசமாணிக்கம் ஈ) துரைசாமி
8. “மாணிக்கம்” என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்
அ) பாரதியார் ஆ )பாரதிதாசன்
இ) பெருஞ்சித்திரனார் ஈ) கவிமணி
9. “பாவலரேறு” என்று சிறப்புப்பெயரால் அழைக்கப்படும் கவிஞர்
அ) பாரதியார் ஆ)பாரதிதாசன்
இ) பெருஞ்சித்திரனார் ஈ) கவிமணி
10. நம் பாடப்பகுதியில் இடம்பெறும் தமிழ்க்கும்மி கவிதைப்பேழை பாடலைப் பாடியவர்
அ) பாரதியார்
ஆ) கண்ணதாசன்
இ) பெருஞ்சித்திரனார்
ஈ) கவிமணி
11. நம் பாடப்பகுதியில் இடம்பெறும் தமிழ்க்கும்மி கவிதைப்பேழை பாடல் இடம்பெறும் நூல்
அ) கனிச்சாறு
ஆ) கொய்யாக்கனி
இ) பாவியக்கொத்து
ஈ) நூறாசிரியம்
12. “தென்மொழி. தமிழ்ச்சிட்டு. தமிழ் நிலம்” ஆகிய இதழ்களை நடத்தியவர்
அ) கல்யாண சுந்தரனார்
ஆ) கண்ணதாசன்
இ) பெருஞ்சித்திரனார்
ஈ) சுரதா
13. திசைகள் ________ செந்தமிழின் புகழ் பரவ வேண்டும்.
அ) இரண்டிலும் ஆ) எட்டிலும்
இ) நான்கிலும் ஈ) பத்த்திலும்
14. ________ சிறந்து வாழ்வதற்கான வழிகாட்டு முறைகள் காெண்டது தமிழ்.
அ) உலகம் ஆ) ஊர்
இ) தெரு ஈ) நாடு
கோடிட்ட இடங்களை நிரப்புக
1. தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாலவர் ________
விடை : பெருஞ்சித்திரனார்
2. எட்டுதிசையிலும் ________புகழ் எட்டிடவே கும்மி கொட்டுங்கடி- விடுபட்ட சொல்லை நிரப்புக
விடை : செந்தமிழின்
3. ________ பல நூறு ஆண்டுகளைக் கணடது
விடை : தமிழ்மொழி
4. பொய்யாமை அகற்றும் மொழி ________
விடை : தமிழ்மொழி
5. உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளையும் காட்டும் மொழி ________
விடை : தமிழ்மொழி
பொருள் கூறுக
1. ஆழி - கடல்
2. மேதினி - உலகம்
3. மேன்மை - உயர்வு
4. ஊழி - நீண்டதொரு காலப்பகுதி
திங்கள், 12 ஜூன், 2023
UGC NET City allotment June 2023
UGC – NET ஜூன் 2023 நகர அறிவிப்பு
தேர்வெழுதும் நகரத்தை எப்படி தெரிந்துக் கொள்வது
முக்கிய இணைப்புகள்
செவ்வாய், 6 ஜூன், 2023
இன்பத் தமிழ் ஆறாவது தமிழ் 6th TNPSC Tamil
இன்பத்தமிழ்
தமிழுக்கும் அமுதென்றுபேர்! – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! *
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்! *
தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! *
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
- பாரதிதாசன்
பாரதிதாசன் குறிப்பு
• பெயர் : பாரதிதாசன்
• இயற்பெயர் : சுப்புரத்தினம்
• பிறந்த ஊர் : புதுச்சேரி
• பெற்றோர் : கனகசபை – இலக்குமி அம்மையார்
• பணி : தமிழாசிரியர்
• காலம் : 29-04-1891 முதல் 21-04-1964 வரை
• சிறப்புப்பெயர் :
1.பாவேந்தர்
2.புரட்சிக்கவிஞர்
• இயற்றிய நூல்கள் :
1.குடும்ப விளக்கு
2.பாண்டியன் பரிசு
3.பிசிராந்தையார்
4.அழகின் சிரிப்பு
வினாக்கள்
BOOK BACK வினாக்கள் & விடைகள்
ஞாயிறு, 4 ஜூன், 2023
சிறுபாணாற்றுப்படையில் பாணனின் வறுமை
சிறுபாணாற்றுப்படை
சங்க இலக்கிய நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் மூன்றாவதாக அமைந்துள் நூல் சிறுபாணாற்றுப்படை ஆகும்.
சிறுபாணாற்றுப்படை என்னும் நூலை இயற்றியவர் நல்லூர் நத்தத்தனார் ஆவார்.
இந்நூல் மொத்தம் 269 அடிகளைக் கொண்டதாகும்.
ஓய்மாநாட்டு நல்லிமக் கோடனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட நூலாகும்.
நல்லியக்கோடனனிடம் பரிசில் பெற்ற சிறுபாணன் வழியில் வரும் இன்னொரு பாணனை ஆற்றுப்படுத்துவதாக அமைந்ததே சிறுபாணாற்றுப்படை ஆகும்.
ஆற்றுப்படுத்துவது என்றால் நெறிப்படுத்துதல் என்ற பொருள். வழியில் வரும் பாணனை நல்லியக்கோடனிடம் சென்றால் உமக்கும் பொருள் கிடைக்கும் அதனால் வறுமை நீங்கும் என்று கூறுவதே ஆகும்.
பாணனின் வறுமை
சிறுபாணன் நடந்துச் செல்லும் அவ்வழியானது மிகவும் கொடியது என்றாலும் அந்த வழியில் தான் சென்றாகவேண்டும். ஏனெனில் தன் பசியைப் போக்க பரிசில் வருவோரை தேடிச் செல்ல வேண்டும். இதுவே பாணனின் வாழ்வியல் நிலையாக உள்ளது எனலாம்.
............................. விண்ணா
டிறவாக் கண்ண சாய்செவிக்
குருவை...
கறவாப் பான்முலை கவர்த
நோனாது
புனிற்றுநாய் குரைக்கும் புல்லெ
னனட்டிற்.
என்ற பாடல் வரிகளின் மூலம் பாணனின் வறுமையை அறியமுடிகின்றது.
இந்தப் பாடல் வரிகளின் மூலம் பாணனின் அடுப்பங்கரை எவ்வாறு உள்ளது என்பதை அறியமுடிகிறது.
நாய்கள் பொதுவாக குட்டிகளை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தான் ஈனும் ஆனால் இங்கோ அடுப்பங்கரையில் குட்டிகளை ஈன்று இருக்கிறதென்றால் பாணன் வீட்டில் சமைக்க அடுப்பங்கரைக்கு சென்று எவ்வளவு நாள் ஆகியிருக்கும் என்ற வறுமை நிலையை இதன் மூலம் அறியலாம். அடுப்பங்கரையில் கண்களை திறக்காத அந்த நாய் குட்டிகள் தாயின் மடியில் பால் குடிக்கின்றன. ஆனால் தாயோ வற்றிய முலையுடன் இருப்பதால் வலியைக் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறது. வறுமையின் காரணமாக நாய்களும் உணவில்லை.
இப்படிப்பட்ட வீட்டில் பசியினால் வருந்தி ஒடுங்கிய வயிறையும் கைகளில் வளையல்களை அணிந்துள்ள பாணனின் மனைவியான பாடினி தன் கை விரல் நகங்களால் குப்பையில் உள்ள கீரையினைக் கிள்ளி அவற்றை உப்பில்லாமல் சமைக்கிறாள். உப்புக் கூட வாங்க முடியாத அளவிற்கு ஏழ்மையில் இருந்தது. எனவே உப்பில்லாமல் சமைத்த அந்த குப்பைக் கீரையை உண்பதைப் பார்த்தால் நினைப்பார்கள் என்று அஞ்சி தெருக் கதவினை அடைத்துவிட்டு சாப்பிட்டனர். இப்படிப்பட்ட பாணனின் வறுமைச் செய்திகளை இதன் மூலம் நன்கு அறியமுடிகின்றது.
Indian Airforce Agniveer (Army) Recruitment 2023 | 10th Pass to Any Degree | 1465 Vacancy | Apply Online
இந்திய விமானப்படை அக்னிவீர் ஆட்சேர்ப்பு 2023 | 1465 காலியிடங்கள் | எந்த பட்டப்படிப்புக்கும் 10வது தேர்ச்சி | சம்பளம் ரூ 30000 முதல் 40000 வரை | தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலைகள் 2023 | வேலைகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
இந்திய கடற்படை அக்னிவீர் ஆட்சேர்ப்பு 2023 எப்படி விண்ணப்பிப்பது
📱 Mobile Battery Save செய்வது எப்படி? – Battery Life அதிகரிக்கும் 10 எளிய வழிகள் | battery life increase tips | 10 best tips for battery 🔋 life increase
Mobile battery life சேமிப்பது எப்படி jpg . 📱 Mobile Battery Save செய்வது எப்படி? – Battery Life அதிகரிக்கும் 10 எளிய வழிகள் 🧠 அறிமுகம் இன்...





.jpeg)